உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 3 வயது குழந்தையுடன் தாய் மாயம் - கணவர் போலீசில் புகார்

Published On 2022-10-05 09:50 GMT   |   Update On 2022-10-05 09:50 GMT
  • திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி திவ்யா தேவி (வயது 28)
  • வீட்டிலிருந்து தனது 3 வயது குழந்தை தர்ஷனாவுடன் வெளியே சென்ற திவ்யா தேவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

திருச்சி

திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி திவ்யா தேவி (வயது 28) இவர்களுக்கு தர்ஷனா (வயது 3) என்ற மகள் உள்ளார். நாராயணன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி நாராயணன் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்து தனது 3 வயது குழந்தை தர்ஷனாவுடன் வெளியே சென்ற திவ்யா தேவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

நாராயணன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் திவ்யா தேவியை காணவில்லை. இது குறித்து நாராயணன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் பேரில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து திவ்யா தேவியை தேடி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி உறையூர் வேர்ஹவுஸ் காலனி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் தாரணி (வயது 20) இவர் சாலை ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை,

இது தொடர்பாக அவரது தந்தை பாலசுப்பிரமணியம் உறையூர் போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாரணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News