உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பெரிய அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 48). சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இவர், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயபிரகாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.