- அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
- உடலை கைப்பற்றி முசிறி போலீசார் விசாரணை
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சின்ன வேளகா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 67). முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் வேளாகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காத தங்கவேல் அதனை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தங்கவேல் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.