உள்ளூர் செய்திகள் (District)

நுாறு ரூபாயால் தொலைந்து போன சிறுமியின் உயிர்

Published On 2023-04-26 07:43 GMT   |   Update On 2023-04-26 07:43 GMT
  • பள்ளி திரும்பிய சிறுமியிடம் பாட்டி கோபம் கொண்டதால் ஆத்திரம்
  • திருச்சி துவாக்குடியில் நடந்த துயர சம்பவம்

திருச்சி,

திருச்சி துவாக்குடி வாளவந்தான்கோட்டை முல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரின் மகள் தேவகி(வயது 11). தேவகி பாய்லர் பிளாண்ட் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி நேரம் முடிந்ததும் தேவகி வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரின் பாட்டி 100 ரூபாய் தொலைந்து போனது தொடர்பாக சிறுமியை திட்டி உள்ளார். இதனால் கோபம் கொண்ட சிறுமி அறைக்குள் சென்றுள்ளார். வெகுநேரம் அறையைவிட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த தந்தை முருகானந்தம் உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News