உள்ளூர் செய்திகள்

திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு

Published On 2023-05-02 08:05 GMT   |   Update On 2023-05-02 08:05 GMT
  • போக்சோ வழக்கில் கைதாக திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்
  • கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பாலநகர் கே.ஆர்.எஸ். வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமச்சந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய ஜெயில் அதிகாரி கண்ணன் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News