உள்ளூர் செய்திகள்

அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரூ.4 லட்சம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2023-05-01 09:25 GMT   |   Update On 2023-05-01 09:25 GMT
  • 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
  • வாலிபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அம்பத்தூர்:

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், கார்த்திக் மற்றும் போலீசார் அண்ணனூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 20 கிலோ கஞ்சாவுடன் நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த கவிராஜ்(24), அஜித் குமார் (25) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News