உள்ளூர் செய்திகள்

வல்லம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-25 10:50 GMT   |   Update On 2023-06-25 10:50 GMT
  • மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
  • விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகர், துர்க்கை நவகிரக மூர்த்திகள், முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.

இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கரி கோலம், அஷ்டாதச கிரியை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷேக்னஹோமம், தீபாராதனை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

27-ந்தேதி மஹாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், யாகசாலை நிர்மாணம்,வேதபாராயணம், தீபாராதனை இரண்டாம் கால பூஜையும் மாலை 6-மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்பணம், ரசாபந்தனம், கும்பாலங்கனம், கலாகர்ஷணம் மூன்றாம் கால பூஜையும் 5000 முறை ஐந்து குண்டங்களில் ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனையும் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாநீதி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10 மணிக்கு முத்து மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News