உள்ளூர் செய்திகள்

வேலூர் ரங்காபுரத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2023-01-17 09:30 GMT   |   Update On 2023-01-17 09:30 GMT
  • 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்பு
  • மாடுகள் சிலரை முட்டியது

வேலூர்:

வேலூர் ரங்காபுரத்தில் இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்த விழா மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. சில இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் ரங்கா புரத்தில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளை குளிப்பாட்டி மாட்டுக்கு அலங்காரம் செய்து, வீதிகளில் அழைத்து வந்தனர். அப்போது பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் மாடுகளை இளைஞர்கள் உற்சாகமாக அழைத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து பிள்ளையார் கோவில் தெருவில் ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது மாடுகள் கூட்டத்தின் நடுவே சீறி பாய்ந்து ஓடியது. சுற்றியிருந்த இளைஞர்கள் கைகளால் மாடுகளை தட்டி உற்சாகப்படுத்தினர். சில மாடுகள் திமிறிக்கொண்டு அங்கிருந்த பார்வையாளர்களை முட்டுவதுபோன்று வேகமாக ஓடியது. மாடுகள் சிலரை முட்டியது. சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். மாடுகளும் மோதிக்கொண்ட சம்பவமும் நடந்தது.

இந்த விழாவைக்கான வேலூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் ரங்காபுரத்தில் குவிந்தனர். அவர்கள் வீட்டின் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டது. இந்த விழாவால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News