உள்ளூர் செய்திகள் (District)

178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது

Published On 2023-05-07 08:42 GMT   |   Update On 2023-05-07 08:42 GMT
  • 178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விருதுநகர்

சிவகாசி தாயில்பட்டி டி.ராமலிங்கபுரம் பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பாலமுருகன் (வயது 35) என்பவரது வீட்டில் 48 குரோஸ் பட்டாசு திரிகளும், உமாராஜ் (58) வீட்டில் 36 குரோஸ் பட்டாசு திரிகளும், வீரராஜ் (50) வீட்டில் 50 குரோஸ் பட்டாசு திரிகளும், செல்வராஜ் (61) வீட்டில் 44 குரோஸ் பட்டாசு திரிகளும் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News