உள்ளூர் செய்திகள்

முகத்தில் தீ வைத்து இளம்பெண் சாவு

Published On 2022-07-05 08:23 GMT   |   Update On 2022-07-05 08:23 GMT
  • கணவர் “அழகில்லை” என கூறியதால் முகத்தில் தீ வைத்து கொண்ட இளம்பெண் இறந்தார்.
  • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி கற்பகம் (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகம் தனது முகத்தில் தீ வைத்துக் கொண்டார்.

தீயில் கருகிய அவரது முகம் கோரமானது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீ வைத்தது குறித்து பேச்சியம்மாள் மகளிடம் விசாரித்துள்ளார். இதில் கணவர் அடிக்கடி "அழகில்லை" எனக்கூறி கேலி கிண்டல் செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கற்பகம் பரிதாபமா இறந்தார்.

இதுகுறித்து பேச்சியம்மாள் ெகாடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News