உள்ளூர் செய்திகள் (District)
காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்
- காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
- 52 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே குந்தலப்பட்டி கிராமத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 52 வாக்குச்சாவடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடி நிர்வாகிகளின் செயல் பாடு குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பால கிருஷ்ணசாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர். வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பட்டியல் வழங் கப்பட்டது.கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் நாகேந்திரன், வைரமுத்து, மற்றும் வைரவசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.