உள்ளூர் செய்திகள் (District)

டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-06-18 08:37 GMT   |   Update On 2022-06-18 08:37 GMT
  • டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.

பொது மக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்திடுமாறும், மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடுமாறும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வண்ணம் தங்களது நிறுவனங்களை சுத்தமாக பேணிகாத்திட கேட்டுக்கொள்ளப்ப டுகின்றனர்.

வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைத்து கொள்ளவேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும்.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை முடித்து திறக்கப்படுவதால் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும், பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தகவல் தெரிவித்து பள்ளி குழந்தைகளை காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் காய்ச்சல் தொடர்பான விடுப்பிலிருந்தால் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல ஆலோசனை தருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

பொது மக்கள் காய்ச்சல் கண்ட உடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். பொது மக்கள் அரசு அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற செல்ல வேண்டாம். போலி மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அரசின் நிலையான சிகிச்சை முறைகளை செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டத்தினை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News