உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி

Published On 2023-01-19 09:43 GMT   |   Update On 2023-01-19 09:43 GMT
  • பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது
  • போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.எஸ். பாய்ஸ் வாலிபால் கிளப் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.

இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் செயலர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கு பெற்றனர். இறுதிப் போட்டியில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாடினர். இதில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் 3-க்கு 2 என்ற கணக்கில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராண்டாமிடம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

Tags:    

Similar News