உள்ளூர் செய்திகள் (District)

சரக்கு வாகனம் மீது பஸ் மோதல்; 5 பேர் படுகாயம்

Published On 2022-09-02 09:45 GMT   |   Update On 2022-09-02 09:45 GMT
  • சாத்தூர் அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாத்தூர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் இருக்கும் சகோதரி வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் அருேக வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மாரீஸ்வரி (40), அவரது மகன்கள் மாரி ரமேஷ் (20), மாரி பாபு (19), தாய் கங்கா தேவி, டிரைவர் சுரேந்திரன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரி, கங்காதேவி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News