உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த வேல்துரை.

கடையநல்லூர் அருகே யானை தாக்கி காவலாளி பலி

Published On 2023-06-10 08:37 GMT   |   Update On 2023-06-10 08:37 GMT
  • கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
  • வேல்துரை ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்தார்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருப்பாநதி அணைக்கட்டு அருகே உள்ள கலைமான் நகரில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

யானை தாக்கி காவலாளி பலி

இவர்கள் மலைப்பகுதியில் வேலை செய்து வருகின்றனர். இதில் வேல்துரை (வயது 28) என்பவர் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாற்று பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று இரவு காட்டு யானை தாக்கியத்தில் காவலாளியின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News