உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

நிலமோசடி வழக்கில் பெண்ணுக்கு பிடிவாரண்டு

Published On 2022-12-27 07:57 GMT   |   Update On 2022-12-27 07:57 GMT
  • நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • நிலமோசடி வழக்கில் ஆஜராகாத பெண் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த் கண்ணா (வயது34). இவருக்கு சொந்தமான நிலத்தை திண்டுக்கல் மூக்கன் ஆசாரி சந்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது மகள்களான அனிதா, கண்மணி, மகன் வீரப்பன் மற்றும் உறவினர் ஆகியோருக்கு விற்பனை செய்தார்.

இந்த நிலத்துக்கான பணத்தை அஸ்வந்த்க ண்ணாவுக்கு வழங்கியது போல ராஜேந்திரன் போலி ரசீது தயாரித்து வழங்கினார். தன்னிடம் நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அஸ்வந்த்கண்ணா மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்-2 கோர்ட்டில் நடந்தது. விசாரணைக்காக ராஜேந்திரன், அனிதா, வீரப்பன் உள்பட 5 பேர் ஆஜர் ஆன நிலையில் கண்மணி என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதனையடுத்து கண்மணியை ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் மீனாட்சி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News