உள்ளூர் செய்திகள் (District)

பலியான பூவி.

அரூர் அருகே மின் கம்பியை மிதித்த பெண் பலி, மின் துறையின் அலட்சியமே காரணம், உறவினர்கள் குற்றச்சாட்டு

Published On 2023-11-15 10:10 GMT   |   Update On 2023-11-15 10:10 GMT
  • அரூர் அருகே மின் கம்பியை மிதித்த பெண் பலியானர்.
  • தாழ்வான மின் கம்பிகள் கம்பிகள் குறித்து மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் கிராமத்தை சேர்ந்த மாரப்பன் மனைவி பூவி, (55) தனியார் பால் சென்டருக்கு பால் எடுத்துக் கொண்டு செல்லும் போது அருகிலுள்ள கனகராஜ், என்பவர் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து இருபது

தெரியாமல் பால் ஊற்ற அவசரமாக சென்ற பூவி, அறுந்து விழுந்திருந்த மின் கம்பி மீது தெரியாமல் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.

பக்கத்து தோட்டக்காரர் பால் எடுத்து வரும்போது பூவி இறந்து கிடந்ததை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு மின் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து லைன் பவர் ஆப் செய்யப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் எட்டிப் பிடிக்கும் உயரத்தில் இருப்பதாகவும், இது சம்பந்தமாக பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

தாழ்வான மின் கம்பிகள் கம்பிகள் குறித்து மின்சார துறையினர்ருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பிறகும் நடவடிக்கையின்மையும் அலட்சியப் போக்கே இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து மொரப்பூர் காவல் நிலையத்தில் வழக்குபபதிவு செயனது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News