போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து பகுதியில் குவிந்துகிடக்கும் மரக்கழிவுகள்
- மழைநீரில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.
- மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்க ளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. மேலும் போடியில் இருந்து வெளியேறும் மழை உபரி நீர் கொட்டக்குடி ஆற்றின் வழியே வைகை ஆற்றுக்கு செல்கிறது.
நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி பொதுப்பணித்து றை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதனால் இது போடியில் திற்பரப்பு என்று அழைக்க ப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குரங்கணி, கொட்டகுடி, போடி மெட்டு, பிச்சாங்கரைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் மற்றும் மரங்கள் குப்பைகள் அனைத்தும் நீர்வீழ்ச்சி மதகு தடுப்பணைப் பகுதிகளில் குவிந்து உள்ளது.
பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் குப்பைகள், மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அணைக்கட்டுப் பகுதிகளில் குவிந்து கிடப்பதால் நீர்வரத்து பகுதியில் உள்ள சிமெண்ட் தளங்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை இப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை அப்புறப்படுத்தி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி நீர்வரத்து பகு தியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.