உள்ளூர் செய்திகள் (District)

கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-02-21 08:39 GMT   |   Update On 2023-02-21 08:39 GMT
  • எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
  • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பாபு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 19-ந்தேதி அன்று வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சக்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சக்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி யுவராணி கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் தளி கொத்தநூர் பகுதியை சேர்ந்த நாசம்மா (74) என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாததால் மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முத்தப்பா கொடுத்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News