உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-03-31 09:49 GMT   |   Update On 2023-03-31 09:49 GMT
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
  • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வல்லம்:

தஞ்சை அருகே ரெட்டிப்பா ளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் குமார் (43).

கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு குமாரிடம் கோபித்து கொண்டு மாரிய ம்மாள் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.இதனால் மனவேதனை யில் குமார் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையல் நேற்று மது அருந்திவிட்டு வந்த குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

குமார் தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து குமாரின் தாய் லட்சுமியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News