உள்ளூர் செய்திகள் (District)
தாரமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
தாரமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி–லுள்ள சின்னசோரகை கிராமம் தேங்காய் கோட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோபி (வயது 25) கல் உடைக்கும் தொழிலாளி.
நேற்று இவர் நாயக்கன்பட்டி சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். சின்னப்–பம்பட்டி அருகிலுள்ள அய்யனாரப்பன் கோவில் அருகில் வந்தபோது ஈரோட்டில் இருந்து ஓமலூர் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கோபியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோபி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.