உள்ளூர் செய்திகள் (District)
குமாரபாளையத்தில் விபத்தில் தொழிலாளி பலி
- குமாரபாளையம் மேற்குகாலனியில் வசிப்பவர் நேற்று இவர் ஆனங்கூர் சாலை, காளியண்ணன் நகர் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வழியில் இருந்த மின் கம்பத்தில் மோதி, நிலை தடுமாறி விழுந்தார்.
- இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜூ பரிதாபமாக உயிரிழந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் மேற்குகாலனியில் வசிப்பவர் ராஜூ(வயது 33), தனியார் நிறுவன தொழிலாளி.
நேற்று இவர் ஆனங்கூர் சாலை, காளியண்ணன் நகர் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வழியில் இருந்த மின் கம்பத்தில் மோதி, நிலை தடுமாறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜூ பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.