உள்ளூர் செய்திகள் (District)
- வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே ஒப்பந்தவாடி அடுத்துள்ள புனந்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று வாணியம்பாடி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக சந்தோஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.