உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது.
- பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவரது மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது. இதனால் இளம்பெண் தனது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்து உறவினர்களிடம் புலம்பி வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.