உள்ளூர் செய்திகள்

குரும்பூர் அருகே நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2022-12-27 09:31 GMT   |   Update On 2022-12-27 09:31 GMT
  • முத்துக்குமார் என்ற மதுரை முத்து கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார்.
  • மாரியப்பனை, முத்துக்குமார் அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார்.

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள அழகப்பப்புரத்தை சார்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது நண்பர் தூத்துக்குடி அண்ணா நகர் சார்ந்த முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32). இவர் கடந்த ஆறு மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக மாரியப்பன், முத்துக்குமார் மனைவியிடம் அடிக்கடி தண்ணீர் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் வீட்டு அருகே நடந்து வந்தபோது மாரியப்பனை, முத்துக்குமார் தனது வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து காலில் வெட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரும்பூர் போலீசார் நண்பனை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News