உள்ளூர் செய்திகள் (District)
முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட யஷ்வந்த் என்பவரை போலீசார் கைது செய்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- யஷ்வந்த் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தார்.
அதில் சந்தேகப்படும் நபராக கருதப்பட்ட முண்டியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் யஷ்வந்த் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர். இதில் அவர் மோட்டார் சைக்கிள்களை திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து யஷ்வந்த் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.