உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 12 சந்தன மர கட்டைகளுடன் வாலிபர் கைது

Published On 2023-03-30 09:37 GMT   |   Update On 2023-03-30 09:37 GMT
  • காமராஜர் வீதியில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது

கோவை,

கோவை சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் வீதியில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் 12 சந்தன மர துண்டுகள் இருந்தது. போலீசார் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொம்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(32) என்பதும், வடவள்ளி மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது நண்பர்களான விஜய், சசிகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News