கதம்பம்

சிரிக்க மறக்காதே!

Published On 2024-07-26 08:12 GMT   |   Update On 2024-07-26 08:12 GMT
  • புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
  • உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்…

1.வாழ்க்கை அர்த்தம் தேடிக்கொண்டிருப்பதற்கல்ல, அனுபவிப்பதற்கு..

2. நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது..

நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது..

ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

3. புன்னகைத்துப் பாருங்கள்… வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

4. சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

5. சிரிப்புதான் வலிக்கு மருந்து..

சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்..

சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்!.

6. உன் மனம் வலிக்கும் போது சிரி.. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

7. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.

8. போலிக்கு தான் பரிசும் பாராட்டும். உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.

9. இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சனைகள் உட்பட.

10. கனவுகள் எல்லாம் நனவாகும், நிறைய காயங்களுக்குப் பிறகு..

11. நீ எப்போதும் வானவில்லைக் காண முடியாது… உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்!

12. கெடுதல் செய்யத்தான் அதிகாரம் தேவைப்படும். மற்றபடி அன்பிருந்தால் எதையும் சாதிக்கலாம்.!

13. பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும். வாழ்க்கை இப்படித்தான்.!

-அழகு ராஜா

Tags:    

Similar News