செய்திகள் (Tamil News)

டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2016-06-15 10:17 GMT   |   Update On 2016-06-15 10:17 GMT
டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை தலைமை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை தலைமை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் ஹேமந்த் குமார்(25) என்பவர் அலுவலக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் ஹேமந்த் குமார் தன்னுடன் கொண்டுவந்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டெல்லியில் உள்ள மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் முதன்முறையாக நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் குமாரின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக டெல்லி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Similar News