செய்திகள்
டெல்லியை இன்று மாலை மீண்டும் தாக்கிய புழுதிப்புயல் - விமானச் சேவைகள் நிறுத்தம்
தலைநகர் டெல்லியை இன்று மாலை மீண்டும் புழுதிப்புயல் தாக்கியதால் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. #Duststorm
புதுடெல்லி:
டெல்லியில் இன்று காலை முதல் உக்கிரமான வெயில் தாக்கியது. மாலை வானிலை முற்றிலுமாக மாறி, வானம் மேகமூட்டமாக தென்பட்டது. சுமார் 4.30 மணியளவில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது.
இதன் எதிரொலியாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், தெலுங்கானா, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், கர்நாடக மாநிலத்தின் உள்பகுதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி கேரளா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. #tamilnews #Duststorm