செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

Published On 2018-05-20 07:55 GMT   |   Update On 2018-05-20 09:28 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarhattack
ராய்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chhattisgarhattack #IEDblast #jawanskilled
Tags:    

Similar News