செய்திகள்

தேவேகவுடா, குமாரசாமியுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு

Published On 2018-05-23 02:07 GMT   |   Update On 2018-05-23 02:07 GMT
பெங்களூரு வந்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடக புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று(புதன்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அவருக்கு முக்கியமான அரசு அலுவல் பணி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று பெங்களூரு வந்து தேவேகவுடாவைவும், குமாரசாமியையும் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு சந்திரசேகரராவ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவதற்கும் சந்திரசேகரராவ் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சிறிது நேர உரையாடலுக்கு பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 
Tags:    

Similar News