செய்திகள்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

Published On 2018-05-25 12:08 GMT   |   Update On 2018-05-25 12:08 GMT
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். #CBSEresults
புதுடெல்லி:

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12 வகுப்பு தேர்வு எழுதினர்.

12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார். மாணவ-மாணவியர் கூகுளில் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணையதளங்களிலும் வெளியிடப்படும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. #CBSEresults

Tags:    

Similar News