செய்திகள்

பா.ஜனதா பைத்தியகார கொலைக்கார கட்சி, வழியில் யார் வந்தாலும் கொல்லும் - சிவசேனா ஆவேசம்

Published On 2018-05-25 16:40 GMT   |   Update On 2018-05-25 18:01 GMT
பாரதிய ஜனதா ஒரு பைத்தியகார கொலைக்கார கட்சி, வழியில் யார் வந்தாலும் கொல்லும் என சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. #BJP #ShivSena
மும்பை:

பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. பாரதிய ஜனதாவை ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் கடுமையாக தாக்கி வருகிறது.

மராட்டிய மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு கூட்டணி கட்சிகளான சிவசேனாவும், பாரதிய ஜனதாவும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கி உள்ளது. இரு கட்சிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்கையில் சிவசேனா துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டினர்.

அவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாரதிய ஜனதா ஒரு பைத்தியகார கொலைக்கார கட்சி, வழியில் யார்வந்தாலும் கொல்லும் என கூறிஉள்ளார்.

விரார் பகுதியில் அமைந்து உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற யோகி ஆதித்யநாத் கால் செருப்பை கழட்டவில்லை எனவும் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. நாங்கள் முதுகில் குத்திவிட்டோம் என யோகி ஆதித்யநாத் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் பேசுவதற்கு பொருத்தமானது கிடையாது. பாரதிய ஜனதாதான் பால் தாக்கரேவை முதுகில் குத்தியவர்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளது என சிவசேனா கூறியுள்ளது. #BJP #ShivSena
Tags:    

Similar News