செய்திகள்

ரெயிலில் திருட்டு: தம்பதிக்கு ரூ.1½ லட்சம் நஷ்ட ஈடு- தேசிய நுகர்வோர் கமி‌ஷன் உத்தரவு

Published On 2018-05-28 08:08 GMT   |   Update On 2018-05-28 08:08 GMT
ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் தம்பதியின் பொருட்களை திருடியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தேசிய நுகர்வோர் கமி‌ஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் கணவன்- மனைவி பயணம் செய்தனர். அவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பெட்டி வைத்திருந்தனர். அப்போது அந்த பெட்டியில் அத்துமீறி ஏறிய பிச்சைக்காரன் பெட்டியை உடைத்து அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்று விட்டான். இச்சம்பவம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இது குறித்து தேசிய நுகர்வோர் கமி‌ஷனிடம் தம்பதியினர் புகார் செய்தனர். ரெயில்வேயின் கவனக்குறைவு காரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய பிச்சைக்காரன் தனது பொருட்களை திருடிச் சென்று விட்டதாக புகார் கூறி இருந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் கமி‌ஷன், தம்பதிக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.#tamilnews
Tags:    

Similar News