செய்திகள் (Tamil News)

மக்களை நெருங்கி செல்வதை தடுக்க முடியாது - பாதுகாப்பு கெடுபிடி பற்றி மோடி கருத்து

Published On 2018-07-03 11:20 GMT   |   Update On 2018-07-03 11:20 GMT
மந்திரிகள் மற்றும் அதிகரிகள் கூட பிரதமரை நெருங்க கூடாது என பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், நான் மக்களை நெருங்கி செல்வதை யாரும் தடுக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi
புதுடெல்லி:

பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவருக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டன. மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கூட பாதுகாவலர்களின் உரிய அனுமதி இல்லாமல் பிரதமரை நெருங்க கூடாது என கெடுபிடி விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்வராஜ் பத்திரிகைக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில்:-

நான் சர்வ வல்லமை படைத்த தலைவர் இல்லை. மக்களின் பலமே எனக்கான பாதுகாப்பு. வெளியூர்களுக்கு செல்லும் போது எல்லா தரப்பு மக்களும் சாலையோரம் நின்று என்னை வரவேற்கின்றனர். காரின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால், காரிலிருந்து இறங்கி அவர்களை சந்தித்து என்னால் ஆன வரை உரையாற்றுகிறேன்

என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News