செய்திகள்

பீகாரில் விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலி

Published On 2018-08-09 13:21 GMT   |   Update On 2018-08-09 13:21 GMT
பீகார் மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா :

பீகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பீலா ஜெபுர் கிராமத்தில் தினேஷ் என்பவர் தனது வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயலும் போது விஷவாயு தாக்கி தினேஷ் மயக்கமடைந்தார். இதனால் பதற்றமடைந்த தினேஷ் குடும்பத்தினர் அவரை காப்பற்ற தொட்டிக்குள் இறங்கினர்.

அப்போது, எதிர்பாராத விதமாக காப்பற்ற முயன்றவர்களுக்கும் விஷவாயு தாக்கியதில் தினேஷின் மனைவி, மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 

சம்பவம் அறிந்து அங்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News