செய்திகள்
பாலக்காட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
பாலக்காட்டில் ஏ.டி.எம். எந்திரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எரிமயூர் அருகே எஸ்.பி.ஐ. வங்கி கிளையின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.இந்த எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
வங்கி மேலாளர் சிராஜ் ஏ.டி.எம்.மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தில் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏ.டி.எம். உடைக்கப்பட்டது குறித்து ஆலத்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எலிசபெத் கூறும் போது, ஏ.டி.எம். எந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கார் அப்பகுதியில் உள்ள கோவில் வழியாக சென்ற தடயம் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எரிமயூர் அருகே எஸ்.பி.ஐ. வங்கி கிளையின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.இந்த எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
வங்கி மேலாளர் சிராஜ் ஏ.டி.எம்.மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தில் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏ.டி.எம். உடைக்கப்பட்டது குறித்து ஆலத்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எலிசபெத் கூறும் போது, ஏ.டி.எம். எந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கார் அப்பகுதியில் உள்ள கோவில் வழியாக சென்ற தடயம் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews