செய்திகள்

நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2019-01-25 11:18 GMT   |   Update On 2019-01-25 11:18 GMT
ஒடிசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என குற்றம்சாட்டினார். #RahulGandhi
புவனேஷ்வர்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று சென்றார். புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அமைப்புகளையும் அடக்கியாள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

பா.ஜ.க.வின் தாய் கழகமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. கல்வி, நீதித்துறை என அனைத்திலும் அவர்கள் ஊடுருவி உள்ளனர். நடுத்தர மக்கள் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியும் தரமான கல்வி கிடைப்பதில்லை. மருத்துவ துறையிலும் இதே நிலை தான். இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும்.



கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றம் வேண்டும். இந்தியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பு பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் மக்களின் தேவைகளை கேட்கிறோம்.

மோடி என்னை வசைபாடும் போது எல்லாம் அவர் என்னை கட்டியணைத்துக் கொள்வதை போல் நினைத்துக் கொள்கிறேன். மோடிக்கு என்னிடமும், எனக்கு மோடியிடமும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவரை எதிர்க்கிறேன். அவர் பிரதமராக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நான் வெறுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #RahulGandhi
Tags:    

Similar News