இந்தியா (National)
உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: 9 மணி வரை 9.10 சதவீத வாக்குப்பதிவு- ராஜ்நாத் சிங் வாக்களித்தார்
உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காலை 9 மணி நிலவரப்படி 59 தொகுதிகளில் 9.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்களித்த ராஜ்நாத் சிங் ‘‘பா.ஜனதா மீண்டும் வரலாறு படைப்பதோடு மட்டுமல்லாம், கடந்த முறையை விட அதிக இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது.’’ என்றார்.