இந்தியா

கேரளாவில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2024-07-28 06:03 GMT   |   Update On 2024-07-28 06:03 GMT
  • கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிர மடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தபடி இருக்கிறது. இந்நிலையில் வருகிற 30-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுதினம் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் மோசமான வானிலை மற்றும் கடல்சீற்றம் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிறுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News