இந்தியா (National)
null

ஏ.டி.எம் எந்திரம் உடைத்து ரூ. 25 லட்சம் கொள்ளை

Published On 2024-07-07 08:09 GMT   |   Update On 2024-07-07 08:12 GMT
  • ஏடிஎம் மையத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.

அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக எல்லையோரம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். காட்பாடி வழியாக கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர், வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News