இந்தியா (National)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு- ஜம்மு காஷ்மீர், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி

Published On 2024-10-05 14:16 GMT   |   Update On 2024-10-05 15:04 GMT
  • இரு மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
  • ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அரியானாவில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 56-66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கணித்துள்ளது.

பாஜக 18- 24, ஜேஜேபி 0- 3 தொகுதிகளிலும், மற்றவை 2- 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல், சிஎன்என் நியூஸ் 18 தகவலின்படி காங்கிரஸ் 59, பாஜக 21, ஆம் ஆத்மி 0, மற்றவை 6 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 49- 61 இடங்களை கைப்பற்றி வெற்றிபெறும் என என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக 20- 32 இடங்களையும், பிடிபி 7-11 இடங்களையும், மற்றவை 4-6 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News