இந்தியா

பெங்களூருவில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்து கார் கண்ணாடியை உடைத்து பெண்ணை தாக்க முயன்ற நபர்

Published On 2024-09-14 02:23 GMT   |   Update On 2024-09-14 02:23 GMT
  • ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.
  • குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளமான ரெட்டிட்டில் வெளியிட்டுள்ள வீடியோ பயனர்களின் கடும் கோபத்தையும், சமூக கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

கத்ரிகுப்பே சாலையில் காரில் அப்பெண்ணும், தாயாரும் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு ஆட்டோ திடீரென இடமிருந்து வலமாகச் சென்றதால் மற்ற வாகனங்கள் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது. ஆட்டோ குறுக்கே வந்தது குறித்து கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் அமைதியாக இருக்க ஆனால் ஆட்டோவில் அமர்ந்திருந்த 20 வயதுடைய நபர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.

மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுத்து, அருகில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த நபர் பெண்ணின் கார் கண்ணாடியை உடைத்து, கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றுள்ளார். சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பெண் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அதனால் வீடியோ வெளிவந்தால் பெண்ணையும், முழு குடும்பத்தையும் கற்பழித்த பிறகு கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார்.

அந்த பெண் தனது காருக்குள் இருந்து மோதலை பதிவு செய்து, சம்பவத்தின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெங்களூரு போலீசார் ஆட்டோ டிரைவரை கவனக்குறைவாக ஓட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை இதுவரை கைது செய்யவில்லை.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரின் சமூக கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு அதிகபட்ச சட்ட தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News