இந்தியா

ஐஸ்கிரீமில் கிடந்தது யாருடைய விரல்? டி.என்.ஏ.வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2024-06-29 03:10 GMT   |   Update On 2024-06-29 03:10 GMT
  • ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர்.
  • விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் இம்மாதம் 14-ந்தேதி ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கர் என்பவரின் விரல் தான் அது என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News