இந்தியா

தாஜ் மகாலில் மும்தாஜ்-ஷாஜகான் கல்லறைமீது கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்.. வீடியோ வைரல்

Published On 2024-08-04 13:01 GMT   |   Update On 2024-08-04 13:01 GMT
  • சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்தனர்
  • கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை [ABHM] சேர்ந்த சேர்ந்த சியாம்பாபு சிங், வினேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ் மாலின் உள்ளே  மும்தாஜ் -ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட  கல்லறைப் பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள சுவர்களில் ஓம் ஸ்டிக்கர்களையும் ஒட்டியுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்து, கல்லறை அமைந்துள்ள தரைதளத்தின் கதவைப் பூட்டிவிட்டு கங்கை நீரை அங்கு ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது. இதனையடுத்து இருவரையும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News