இந்தியா

கேரளாவில் தொற்று நோய் பாதிப்பு: 79 ஆயிரம் பேர் அவதி

Published On 2024-05-18 04:07 GMT   |   Update On 2024-05-18 08:27 GMT
கேரளவில் சில மாதங்களாகவே தொற்று நோய்கள் பரவி வருகின்றன.

திருவனந்தபுரம்:

பருவநிலை மாற்றத்தின் போது சில தொற்று நோய்கள் பரவுவது சகஜமான ஒன்று. ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஜனவரி மாதத்தில் இருந்தே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக பரவுகிறது.

நோய் பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஏதாவது ஒரு நோய் பாதித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொற்றக்கூடிய காய்ச்ச லால் 78, 718 பேரும், சளி தொல்லையால் 1,567 பேரும், சின்னம்மையால் 971 பேரும், டெங்கு காய்ச்சலால் 328 பேரும், மஞ்சள் காமாலையால் 294 பேரும், மலேரியாவால் 20 பேரும், எலி காய்ச்சலால் 70 பேரும், பன்றி காய்ச்சலால் 37 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.

அது மட்டுமின்றி மேற்கு நைல் காய்ச்சலால் 9 பேரும், ஷிகெல்லா தொற்றால் 4 பேரும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரி களிலும் பல்வேறு தொற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளான ஆயிரக் கணக்கான சிகிச்சை பெறுகின்றனர்.

இவ்வாறு தொற்று நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கு மாநிலத்தில் வழக்கத்தை விட அதிகமாக நிலவிய வெப்பம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ேபாது மழை காரணமாக தொற்று காய்ச்சலால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற தொடங்க உள்ளது.

இது தொற்று நோய்கள் பரவலை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொற்று நோய்கள் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தண்ணீரை காய்ச்சி குடிக்கு மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் பரவி வரும் தொற்று நோய்கள் உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 39 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர், ஹைபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்று பாதிப்புக்கு 16 பேர், சின்னமைக்கு 10 பேர், மலேரியாவுக்கு 3 பேர், தொற்றக்கூடிய காய்ச்சலுக்கு 3 பேர் என 91 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று நோய்களில் பல எளிதில் பரவக்கூடியது என்பதால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தமிழக சுகாதாரத்துறை கவனமாக இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News