இந்தியா

கர்நாடகா: வளர்ப்பு பூனை கடித்து பெண் உயிரிழப்பு

Published On 2024-08-10 12:24 GMT   |   Update On 2024-08-10 12:24 GMT
  • பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவும்.
  • தடுப்பூசி எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தோற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணின் வளர்ப்பு பூனை அவளை கண்டித்துள்ளது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News