இந்தியா

4 மாநில தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

Published On 2024-08-13 09:51 GMT   |   Update On 2024-08-13 10:54 GMT
  • சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
  • பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வேணுகோபால், பூபேஷ் பாகெல், அஜய் குமார், அஜய் மக்தான், சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துகிறது. சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News