இந்தியா

ஆங்கிலவழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம்: என்சிஇஆர்டி இயக்குனர் சொல்வது என்ன?

Published On 2024-06-18 11:47 GMT   |   Update On 2024-06-18 11:47 GMT
  • தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை என்சிஇஆர்டி வலியுறுத்தியுள்ளது.
  • கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மன அழுத்தமாக இருக்கக்கூடாது என்றார்.

புதுடெல்லி:

என்.சி.இ.ஆர்.டி இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெற்றோர்கள் ஆங்கிலவழிப் பள்ளிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் அல்லது போதுமான பயிற்சி இல்லாவிட்டாலும் தங்கள் குழந்தைகளை அத்தகைய பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகிறார்கள். இது தற்கொலைக்கு சமமானது.

எனவேதான், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை வலியுறுத்தியுள்ளது.

நாங்கள் இப்போது 121 மொழிகளில் பிரைமர்களை உருவாக்கி வருகிறோம். அவை இந்த ஆண்டு தயாராக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளை அவர்களது வேர்களுடன் இது இணைக்க உதவும்.

நாம் ஆங்கிலத்தில் திணறத் தொடங்குகிறோம். அங்குதான் அறிவு இழப்பு உள்ளது. மொழி ஒரு செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். அதை முடக்கக்கூடாது.

கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மன அழுத்தமாக இருக்கக்கூடாது. மாணவர்கள் சொற்பொழிவு கற்றலில் இருந்து விலகிச்செல்ல வேண்டும். புதுமையான முறையில் சிந்திக்க உதவும் அனுபவக் கற்றலின் நன்மைகளைப் பெற வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News